தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதைந்தது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு’ ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி!

11 Jun 2026, 8:38 pm
சிதைந்தது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு’ ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி!
<p><strong>‘சிதைந்தது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு’ ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி!</strong></p><p>புதுதில்லி தேசிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து ஏற்படும் குளறுபடிகள், தோல்விகளுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜி னாமா செய்ய வேண்டும் என 73 முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p><strong>கனவுகள் சிதைந்துவிட்டன </strong></p><p>‘அரசியலமைப்பு நடத்தைக் குழு’ என்ற அமைப்பின் கீழ், அகில இந்திய மற்றும் மத்தியப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 73 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் தற்போதைய கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான வேதனையையும், கவலையும் வெளிப்படுத்துகிறோம். ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கண்காணிப்பில் தொடர்ந்து அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள், லட்சக்கணக்கான இளம் இந்தியர்களின் எதிர்காலத்தையும் அவர்களது கனவுகளையும் சிதைத்துவிட்டன. நம் ஜனநாயகத்தின் மிக முக்கியமான அங்கமான பொதுக் கல்வி, தகுதி அடிப்படையிலான தேர்வு முறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இந்த அரசு (மோடி அரசு) முற்றிலுமாகச் சீர்குலைத் துள்ளது. பல ஆண்டுகள் கடுமையாகப் படித்து நீட் தேர்வை எழுதிய 23 லட்சத்திற்கும் அதிக மான மாணவர்களின் வாழ்வாதாரம் வினாத் தாள் கசிவு காரணமாக கேள்விக்குறியாகி யுள்ளது. நாட்டின் முதன்மைத் தேர்வு முகமை களின் நாணயம் முற்றிலுமாகச் சிதைந்து போய்விட்டது.<strong> </strong></p><p><strong>கல்விப் பேரழிவு நிலை</strong> </p><p>ஒன்றிய அரசு அனைத்தையும் ஒரே மையப் புள்ளியில் கொண்டு வர வேண்டும் என்ற பிடி வாதத்தில் இயங்குவதே இந்தத் தோல்வி களுக்கும், முறைகேடுகளுக்கும் காரணம் ஆகும். இளநிலை, உயர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்தியதன் விளைவே தற்போதைய கல்விப் பேரழிவு நிலைக்கு காரணம் ஆகும். <strong> </strong></p><p><strong>சிபிஎஸ்இ தேர்விலும் மெகா குளறுபடி! </strong></p><p>நீட் தேர்வு மட்டுமின்றி, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டிலும் மிகப்பெ ரிய டிஜிட்டல் முறைகேடு நடந்துள்ளது. விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்’ (ஓஎஸ்எம்) என்ற புதிய முறை அவசர அவசரமாக அறிமுகப் படுத்தப்பட்டது ஏன்? என்ற சந்தேகம் வலுத்துள் ளது. குறிப்பாக போர்டல் முடக்கம், பக்கங்கள் விடுபடுதல், விடைத்தாள்கள் மாறுதல் போன்ற குளறுபடிகளால் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற முக்கியப் பாடங்களில் மாணவர்களின் மதிப்பெண்கள், தேர்ச்சி விகிதம் வரலாறு காணாத அளவில் சரிந்தது. </p><p><strong>கருப்புப் பட்டியல்</strong> </p><p>இந்த டிஜிட்டல் பணிக்கான ஒப்பந்தத்தை பெற்ற ‘கோயம்ட்’ என்ற நிறுவனம், ஏற்கெனவே தெலுங்கானா அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஒன்று என்பது எத்திகல் ஹேக்கர்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதற்காக விதிகளில் 3 முறை தளர்வுகள் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இதற்காக சிபிஎஸ்இ தலை வர், செயலாளர் மாற்றப்பட்டது மிகக் குறைந்த நடவடிக்கை, அதுவும் மிகத் தாமதமாக எடுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. உயர்மட்ட அதிகாரிகளின் தலையீடு இல்லா மல் விதிகளில் மாற்றம் செய்திருக்க முடியாது. அதனால் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவி யிலிருந்து நீக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமை, சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை குறித்து குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சுதந்திரமான நீதித்துறை அல்லது நிபுணர் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். வினாத்தாள் கசிவைத் தடுக்க அதிநவீன கிரிப்டோகிராபிக் பாது காப்பு நெறிமுறைகளும், டிஜிட்டல் மென் பொருள்களைப் பயன்படுத்தும் முன் மூன்றாம் தரப்பு தணிக்கையும் கட்டாயமாக்கப்பட வேண்டும். </p><p>லட்சக்கணக்கான மாணவர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் மன உளைச்ச லுக்கு ஆளாக்கிய இந்தத் தவறுகளுக்கு, வெறும் அதிகாரிகளை மட்டும் பலிகடா ஆக்கி விட்டு உயர்மட்டத்தினர் தப்பிக்க முடியாது” என கடிதத்தில் கறாராகத் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.