அசாமில் தரையிறங்கும் போது வெடித்த ராணுவ விமானம்! 5 வீரர்கள் உயிரிழப்பு; துணை விமானி படுகாயம்
13 Jun 2026, 10:51 pm
<p><strong>அசாமில் தரையிறங்கும் போது வெடித்த ராணுவ விமானம்! 5 வீரர்கள் உயிரிழப்பு; துணை விமானி படுகாயம்</strong></p><p>கவுகாத்தி, ஜூன் 13- இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம், அசாமில் விபத்துக்கு உள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். </p><p>விமானப் படையில் வழக்கமான போக்குவரத்துப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ‘ஏஎன்-32’ (An-32) ரகத்தைச் சேர்ந்த இந்த விமா னம், ஜோர்ஹாட் பகுதியின் ரவுரியா விமானப் படைத் தளத்தின் ஓடுதளத் தில் காலை 11 மணி அளவில் தரை யிறங்கியது. </p><p>அப்போது, விமானத் தின் வேகம் குறைந்து வந்த சில நொடிகளிலேயே, விமானம் எதிர் பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிந்து, பயங்கர சத்தத்துடன் வெடித் தது. </p><p>இந்த விபத்தில், விமானப் படை யைச் சேர்ந்த ஸ்குவாட்ரன் லீடர் பிர சாந்த் சிங், பிளைட் லெப்டினண்ட் ஷுபம் குமார், சார்ஜெண்ட் ஜிதேந் திர சர்மா, ‘அக்னிவீர்’ பிரிவைச் சேர்ந்த கேமராம் குமாவத், டேனிஷ் ஆலம் ஆகிய 5 வீரர்கள் உயிரி ழந்ததாக இந்திய விமானப்படை (IAF) தனது அறிக்கையில் உறு திப்படுத்தியுள்ளது. </p><p>துணை விமானி மட்டும் உடனடி யாக பாராசூட் மூலம் வெளியே குதித்ததால், பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். </p><p>அவர் தற்போது ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணி நடைபெறுவதாகவும் இந்திய விமா னப்படை தெரிவித்துள்ளது.</p><p><br></p>
