‘விழாமல் தாங்கிப் பிடிப்பேன்’
14 Nov 2025, 1:26 pm
<p><strong>‘விழாமல் தாங்கிப் பிடிப்பேன்’</strong></p>
<p>சென்னை: குழந்தைகள் நாளையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ தளத்தில் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, குழந்தைகள் வளமாக வளர ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம், பள்ளிக்குச் செல்லும்போது ‘காலை உணவுத் திட்டம்’, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ‘அன்புக்கரங்கள்’, உயர் கல்விக்கு உதவ ‘நான் முதல்வன்’, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப்புதல்வன்’, ஒட்டுமொத்த நலனை உறுதி செய்யத் ‘தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021’ என ஒவ்வொரு அடியிலும் குழந் தைகளின் கனவுகளுக்கு எல்லாம் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப் பேன்!” என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
