திருப்பூரில் ஹோலி கொண்டாட்டம்
4 Mar 2026, 5:01 pm
<p><strong>திருப்பூரில் ஹோலி கொண்டாட்டம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 4- திருப்பூரில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் புத னன்று கோலாகலமாக ஹோலிப் பண்டிகையை கொண்டா டினர். திருப்பூரில் பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்க ணக்கான மக்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். மேலும், மாநகரின் முக்கிய வணிகப் பகுதிகளான காதர்பேட்டை, பி.என்.ரோடு, காமாட்சி அம்மன் கோவில் வீதி, புது மார்க்கெட், அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளையும் நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நாடு முழு வதும் புதனன்று ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் உள்ள வட மாநிலங் களை சேர்ந்தவர்கள் வண்ணப்பொடிகளை வீசி ஹோலிப் பண் டிகையை கொண்டாடினர். மேலும், சொந்த ஊரிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் கடந்து வந்தாலும் திருப்பூரில் தங்களின் கலாச்சார திருவிழாவை எந்த தடையுமின்றி கொண்டாடி யது தங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக வடமாநில வணிகர்களும் தொழிலாளர்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித் தனர்.</p>
<p> </p>
