மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின கருத்தரங்கம்
16 Feb 2026, 2:37 pm
<p><strong>மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின கருத்தரங்கம்</strong></p>
<p>திருவண்ணாமலை, பிப்.16 காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 34 ஆவது அமைப்பு தின கருத்தரங்கம் திரு வண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் நடை பெற்றது. காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் .உமா தலைமை தாங்கினார். 34 ஆண்டில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் தமிழ்நாடு ஆன்றோர் மன்ற உறுப்பி னரும்,மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செய லாளருமான .இரா. சரவணன் சிறப்புரையாற்றி னார். மலைவாழ் மக்கள் சங்க மாநில குழு உறுப்பி னர் எஸ். பழனி, காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.வெங்கடேசன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலா ளர் .அய்யனார், காட்டு நாயகன் பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்வில் காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் 1000 உறுப்பினர்களுக்கான சந்தா தொகையை மாநில செயலாளர் இரா. சரவ ணனிடம் அளிக்கப்பட்டது.<br />
</p>
