முந்தய பக்கம்

தஞ்சாவூரில் கொட்டித் தீர்த்த கோடை மழை

8 Apr 2026, 5:30 am
தஞ்சாவூரில் கொட்டித் தீர்த்த கோடை மழை
<p><strong>தஞ்சாவூரில் கொட்டித் தீர்த்த கோடை மழை</strong></p><p>தஞ்சாவூர், ஏப். 7- தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.</p><p>இந்த மழையின் காரணமாக, கோடையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள், கடலை, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.</p><p>திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, பேராவூரணி, ஒரத்தநாடு, பூதலூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவாகியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram