முந்தய பக்கம்

சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே பெய்த கனமழை

6 May 2026, 1:13 am
சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே பெய்த கனமழை
<p><strong>சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே பெய்த கனமழை</strong></p><p>உதகை, மே 5- உதகை, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே பெய்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.</p><p> நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதமாக மழை இல்லாமல் வறட்சியாக காணப்பட்டது. </p><p>மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தது. </p><p>இதனால் கோடை சீசனில் வந்த சுற்றுலாப் பயணிகளும் நீலகிரி கோடை வெயிலின் தாக்கத்தை அனுபவித்தனர். </p><p>இந் நிலையில், செவ்வாயன்று நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தி ருந்த நிலையில் பிற்பகலில் உதகை சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதி களில் கனமழை பெய்தது. </p><p>இந்த கன மழையின் காரண மாக வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்ட பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்த னர். </p><p>மேலும் இந்த மழை உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட பயிர்களுக்கு உகந்ததாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். </p><p>மழையின் காரணமாக கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram