முந்தய பக்கம்

பலத்த கனமழையால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சேதம்

17 May 2026, 11:11 pm
பலத்த கனமழையால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சேதம்
<p><strong>பலத்த கனமழையால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சேதம்</strong></p><p>கோவை, மே 17- கோவையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. </p><p>கோவை புறநகர் பகுதி களில் வெள்ளியன்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. </p><p>வடவள்ளி, கணுவாய், இடையர்பாளையம், தொண்டாமுத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக மழைபெய்தது.</p><p> ஒரு சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.</p><p> இந்நிலையில், மருதமலை அடிவாரத்தில் அமைந் துள்ள பாரதியார் பல்கலை கழக வளாகத்தில் பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் 10 க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.</p><p> சில மரங்கள் பல்கலை கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் மீதும் சாய்ந்தது. </p><p>மரங்கள் சாய்ந்ததால் ஒரு சில இடங்களில் கட்டிடங் களும் சேதமடைந்தது. </p><p>மேலும் ஏற்கனவே பராம ரிப்பு இல்லாமல் இருக்கும் கட்டிடங்களில் மழை நீர் ஒழுகி கட்டிடங்களுக்குள் புகுந்தது. </p><p>மரங்கள் வேரு டன் சாய்த்துள்ள நிலையில் அவற்றை அப்புறப்ப டுத்தும் பணியில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர். </p><p>600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரதியார் பல்கலை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங் கள் இருப்பது குறிப்பிடதக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram