தனி நலவாரியம் அமைக்கக் கோரி பிப்.12-இல் மாநிலந் தழுவிய போராட்டம் சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு!
10 Dec 2025, 4:08 pm
<p><strong>தனி நலவாரியம் அமைக்கக் கோரி பிப்.12-இல் மாநிலந் தழுவிய போராட்டம் சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு!</strong></p>
<p>சேலம், டிச. 10 - சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வலியுறுத்தி, பிப்ரவரி 12 அன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடை பெறவுள்ளதாக, சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) குழுக் கூட்டம், சேலம் வி.பி. சிந்தன் நினைவகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் ஆர். வெங்கடபதி தலைமை வகித்தார். இக்கூட்டத் தில், பல்வேறு தொழிலாளர் கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில், ஜனவரி 29 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்தில் சுமைப் பணித் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்; சரக்கு பரிவர்த்தனையில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இரண்டு சதவிகிதம் நலநிதி வழங்க வேண்டும். கேர ளத்தைப் போல், சுமைப்பணித் தொழிலா ளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்; சுமைப்பணித் தொழில், தொழிலா ளர்களை பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 12 அன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்து வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சம்மேளன பொதுச்செய லாளர் அருள்குமார், சிறப்புத் தலைவர் எஸ். குணசேகரன், நிர்வாகிகள் ஏ. கோவிந்தன், பிச்சமுத்து, பாண்டி, சுடலைக் காசி, உத்திரா பதி, அர்த்தநாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
