இந்தியாவின் 97ஆவது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையைச் சேர்ந்த ஹர்ஷவர்தன்
58 minutes before
<p><strong>இந்தியாவின் 97ஆவது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் </strong></p><p>தமிழ்நாட்டின் சென்னையில் நடை பெற்ற சோழா செஸ் கிராண்ட் மாஸ்டர் தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய 22 வயது இளை ஞர் ஜி.பி.ஹர்ஷவர்தன் (சென்னை), இந்தியாவின் 97ஆவது ‘கிராண்ட்மாஸ் டர்’ (Grandmaster) பட்டத்தைக் வென்று சாதனை படைத்துள்ளார். ஒன்பது சுற்று கள் கொண்ட இந்தத் தொடரில், 4 வெற்றி கள் மற்றும் 5 டிராகள் மூலம் 6.5 புள்ளி கள் பெற்று அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஹர்ஷவர்தன் “இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் ஆகும். எனக்கு சர்வதேச மாஸ்டர் பட்ட மும், இப்போது மிக உயரிய கிராண்ட் மாஸ்டர் பட்டமும் சென்னையிலேயே கிடைத்துள்ளது ஒரு அற்புதமான தற் செயல் நிகழ்வு. இத்தொடரின் 7-வது சுற்றில், அதுவரை முன்னிலையில் இருந்த போலந்து நாட்டின் பலம் வாய்ந்த கிராண்ட்மாஸ்டரான மைக்கேல் கிராசென்கோவை வீழ்த்தியதுதான் தனது வெற்றிக்கு மிக முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது” என்று கூறி யுள்ளார்.</p>
