கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு!
15 Jun 2026, 10:36 am
<p>கும்மிடிப்பூண்டி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது குழந்தை பரிதாபமாக் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நேற்று இரவு மூன்று வயது குழந்தை உடலில் மோசமான காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் குழந்தையை மீட்டு சென்னை ஸ்டான்ல்கி மருத்துவமனியில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சோதித்ததில் 3 வயது குழந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. </p><p>குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக வடமாநில இளைஞர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென இரவு முழுவதும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.</p><p>இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தில் பீகாரை சேர்ந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். </p><p><br></p>
