முந்தய பக்கம்

நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்த குஜராத் மாணவர் தற்கொலை

18 Jun 2026, 9:06 pm
நீட் மறுதேர்வுக்கு  தயாராகி வந்த குஜராத் மாணவர் தற்கொலை
<p><strong>நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்த குஜராத் மாணவர் தற்கொலை</strong></p><p>குஜராத் மாநிலம் அகமதா பாத்தின் நியூ ராணிப் பகு தியைச் சேர்ந்தவர் காஹன் படேல். வயது 17. இவர் நீட் மறு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.</p><p>இந்நிலையில், வியாழனன்று அதி காலை அரிஸ்டோ ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பின் 6ஆவது மாடியில் இருந்து விழுந்து காஹன் படேல் தற் கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக சபர்மதி காவல் ஆய்வாளர் யுவராஜ்சிங் வகேலா கூறுகையில், “இந்தச் சம்பவம் அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் நடந்துள்ளது. ஆனால் எங்களுக்கு அதிகாலை 4:30 மணியளவில் தகவல் கிடைத்தது. இதுவரை தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. மாணவர் மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது உட்பட, இதற்கான காரணத்தை தற்போது உறுதிப்படுத்த முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.</p><p>எனினும் நீட் தேர்வு ரத்து செய்யப் பட்டதில் இருந்து காஹன் படேலின் போக்கில் மாற்றம் தெரிந்ததாக அண்டை வீட்டினர் கூறியுள்ளனர். மோடி அரசின் அலட்சியத்தால் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வின் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள சூழலில்,ராஜஸ்தான், உத்தரகண்ட், தமிழ்நாட்டைத் தொடர்ந்து குஜராத்திலும் நீட் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாடு முழுவ தும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram