ஒன்றிய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
26 May 2026, 11:38 pm
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>உடுமலை, மே 26- ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள் கையை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையி னால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது.</p><p> இதனால் மக்கள் கடும் பாதிப்பிற் குள்ளாகி வருகின்றனர். </p><p>விலை உயர்வை கட்டுப்ப டுத்த முடியாத ஒன்றிய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். </p><p>திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்ட கிளைத் தலைவர் எஸ்.மார்க்கண்டன் தலைமை வகித்தார். </p><p>மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், இணைச்செயலா ளர் , வட்டக்கிளைச் செயலாளர் கே.வெங்கிடு சாமி, பொருளாளர் எஸ்.தங்கப்பாண்டி, சத் துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜே. எலிசபெத், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.பாலகிருஷ்ணன், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். </p><p>பொள்ளாச்சி கோவை மாவட்டம், பொள்ளாச்சி வணிக வரி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க வட்ட கிளைத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். </p><p>இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜெகநாதன், வட்ட கிளைச் செயலாளர் கிட்டான், பொருளாளர் மதியரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். </p><p>இதேபோன்று, சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
