JEE முதன்மை தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை!
20 Feb 2026, 6:40 am
<p>JEE முதன்மை தேர்வில் 448 தமிழ்நாட்டு அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.<br />
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;<br />
448 அரசு பள்ளி மாணவர்கள் JEE மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது ஒரு சாதனை மட்டுமல்ல — தமிழ்நாடு முழுவதும் வகுப்பறைகளில் அமைதியாக நடைபெற்று வரும் திராவிட மாடல் மாற்றத்தின் வெளிப்பாடாகும்.<br />
இந்தத் தேர்வில் பிரவீன் 99.53 சதவீதம், நரேஷ் 99.50 சதவீதம், வேல்முருகன் 99.42 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் பல அரசு பள்ளி மாணவர்கள் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.<br />
இந்த சாதனை மாணவர்களுக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும், மக்களை முன்னிலைப்படுத்தும் இந்த ஆட்சிக்கும் சொந்தமானது என அவர் தளத்தில் பதிவிட்டுள்ளார்<br />
</p>
