அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
12 Feb 2026, 4:57 pm
<p><strong>அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்</strong></p>
<p>திருவண்ணாமலை,பிப்.12- திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தை ஆதரித்து, வியாழன் அன்று (பிப்.12) இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணித்து ஆதரவு தெரிவித்தனர். இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் விக்னேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோபிநாத் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் பலர் வகுப்பை புறக்கணித்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.</p>
