முந்தய பக்கம்

தென்கொரியா செல்லும் அரசுக் கல்லூரி மாணவர்

27 Nov 2025, 3:11 pm
தென்கொரியா செல்லும் அரசுக் கல்லூரி மாணவர்
<p>திருப்பூர், நவ.27- நான் முதல்வன் திட்டத் தில் சிக்கண்ணா கலை மற் றும் அறிவியல் கல்லூரி மாணவர் தென்கொரியா செல்வதற்கு தேர்வாகியுள் ளார். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறைக்கான, &ldquo;நான் &nbsp;முதல்வன்&rdquo; திட்டத்தின் ஸ்கவுட் (SCOUT) திட் டம் மூலம் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று உயரிய நிறுவனங்களில் மாணவர்கள் பணி &nbsp;அமர்த்தப்படுகின்றனர். இதற்காக பல கட் டத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்தகைய தேர்வுகளில் &nbsp;பங்கேற்ற 7,000 &nbsp;பேரில் இருந்து 21 மாணவர்கள் மட்டுமே &nbsp;இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். அந்த 21 மாணவர்களில் ஒருவராக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் முஹம்மது அனாஸ் தேர்வாகி உள்ளார். தமிழகத்தில் இருந்து தேர்வு செய் யப்பட்ட மாணவர்கள் டிசம்பர் மாதம் முதல் &nbsp;வாரத்தில் தென்கொரியா நாட்டிற்குச் செல்ல இருக் கின்றனர். பயிற்சி முடித்த பின்னர் திறமையின் அடிப்ப டையில் வெளிநாட்டு நிறுவ னங்களே அவர்களைப் பணி யில் அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. கோவை மண்டலத்திற்குட்பட்ட மாவட் டங்களில் உள்ள &nbsp;கல்லூரிகளில் இருந்து &nbsp;தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பூர் சிக்கண்ணா &nbsp;அரசுக் கல்லூரியின் &nbsp;முஹம்மது அனாஸ் &nbsp;என்ற மாணவரை, கோவை மண்டல கல்லூ ரிக்கல்வி இணை இயக்குநர் செண்பக லட் சுமி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், பேராசிரி யர்கள் முன்னாள் மாணவர் சங்கத்தினர் &nbsp;வாழ்த்திப் பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram