அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்</strong></p>
<p>பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி), மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா) ஆகிய அமைப்புகள் சார்பில், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பணிநிலை மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதன்கிழமையன்று (நவ.12) சைதாப்பேட்டை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு துவங்கிய இந்த காத்திருப்புப் போராட்டம் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் உரையாற்றினார்.</p>
