சென்னை விரைவு செய்திகள்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு </strong></p>
<p>சென்னை, மார்ச் 13- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிலையில், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை நீட்டிக்க சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை செல்லாததாக அறிவிக்க வும், ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதியை ஆணை யராக நியமித்து புதிய தேர்தலை நடத்த உத்தர விடவும் கோரி சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் புதிய தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு எந்த முடிவு களையும் எடுக்கக் கூடாது என்றும் மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மரியா கிளாட் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது, நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தீர்மானத்தை, சங்கங்களின் பதிவாளர் ஏற்று உத்தரவு பிறப் பித்துள்ளதாக நடிகர் சங்கம் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதைய டுத்து, நடிகர் சங்கம் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.</p>
<p><strong>விழுப்புரம் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு</strong></p>
<p>விழுப்புரம், மார்ச் 13- விழுப்புரம் நகராட்சியின் புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்று கொண்டார். விழுப்புரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வசந்தி, தர்மபுரி நகராட்சி ஆணையராக இடமாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வேலூர் மாநகராட்சியின் உதவி ஆணையராக பணியாற்றிய சியாமளாதேவி, விழுப்புரம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் புதன்கிழமை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் 64-வது புதிய நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.</p>
<p><strong>தலைமைக் காவலர் பணி இடை நீக்கம் </strong> </p>
<p>கடலூர், மார்ச் 13- கடலூர் மாவட்டம், திட்டக்குடி காவல் நிலையம் தலைமை காவலர் கார்த்திகேயன் என்பவர் சிவில் வழக்கு ஒன்றில் தலையிட்ட குற்றச்சாட்டு சம்பந்தமாக கடலூர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கார்த்திகேயன் கடந்த 11.3.2026 தேதி பெண்ணாடம், அம்பேத்கார் நகர் அருகே திட்டகுடியை சார்ந்த ஜேசிபி உரிமையாளர் அருணகிரிநாதன் என்பவரை வழிமறித்து, திட்டி, தாக்கியது சம்மந்தமாக தலைமை காவலர் மீது பெண்ணாடம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜேசிபி உரிமையாளரை தாக்கிய தலைமைகாவலர் கார்த்திகேயனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளார்.</p>
<p><strong>தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்தது</strong></p>
<p>சென்னை, மார்ச் 13- தங்கம் வெள்ளியன்று சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ வெள்ளி .2,90,000 செய்யப்பட்டது.</p>
<p> </p>
