காட்வின் ஆனந்த் நினைவு ஸ்தூபி, படம் திறப்பு விழா
18 May 2026, 9:00 pm
<p><strong>காட்வின் ஆனந்த் நினைவு ஸ்தூபி, படம் திறப்பு விழா</strong></p><p>குழித்துறை , மே18 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மெதுகும்மல் வட்டா ரக்குழு உறுப்பினராகவும் , த மு எ க ச மாநிலக் குழு உறுப்பினரா கவும்,முரசு கலைக்குழு உறுப்பி னராகவும் செயல்பட்ட தோழர் காட்வின் ஆனந்த் நினைவு ஸ்தூபி மற்றும் படம் திறப்பு விழா ஆலங்கோட்டில் வட்டாரச் செய லாளர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.லாரன்ஸ் முன்னி லையும் வல்சலம் வரவேற்புரை நிகழ்த்தினார். பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி ஸ்தூ பியை திறந்து வைத்தார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் படத்தை திறந்து வைத்தார்.மாவட்ட குழு உறுப்பி னர் சிதம்பரகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகன், த மு ஏ க ச மாவட்டச் செயலாளர் அருள் மனோ, மாவட்டத் தலைவர் ஜெயகாந்தன், அலெக்ஸ் ஆகியோர் பேசினர். </p>
