பொது வேலைநிறுத்தம் - மறியலை விளக்கிப் பிரச்சாரம்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>பொது வேலைநிறுத்தம் - மறியலை விளக்கிப் பிரச்சாரம்</strong></p>
<p>விருதுநகர், பிப்.12- பிரதமர் மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசு, தொழி லாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக்கியுள்ளது. இத னால் தொழிலாளர்கள் கடுமை யாக பாதிக்கப்படுவர். இதனைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வரும் பிப்.12 இல் அகில இந்திய வேலை நிறுத் தப் போராட்டம் நடைபெற உள்ளது. இதனை விளக்கிப் பிரச்சாரக் கூட் டம் விருதுநகர் அருகே சூலக்கரை யில் சிவராமன் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் எம்.சாராள் துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத் தலை வர் எம்.அசோகன் சிறப்புரையாற்றி னர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.ராஜேந்திரன், கிளைச் செய லாளர்கள் நாகேஸ்வரி, கற்பூரம் உட்பட பலர் பங்கேற்றனர். சாத்தூர் வடக்கு ரதவீதியில் மாரிமுத்து தலைமை வகித்தார். சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் பாண்டியன் துவக்கி வைத்து பேசினார். சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.விஜய குமார் சிறப்புரையாற்றினார். காரியாபட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறி யல் விளக்கப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. முன்னாள் வட்டச் செயலாளர் ஏ.அம்மாசி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.முருகன் சிறப்புரையாற்றினார். வத்திராயிருப்பு வட்டம் கூமாப்பட்டியில் சிஐடியு லோடு மேன் சங்க நிர்வாகி கூழ்ச்சாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் சந்த னம் துவக்கிவைத்துப் பேசினார். சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் திருமலை நிறைவு செய்து பேசி னார். சிஐடியு மாவட்டக் குழு உறுப் பினர் ஜெயக்குமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் பெனரி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
<p> </p>
