தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

9 Dec 2025, 4:25 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
<p><strong>காந்தி, நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டி</strong></p> <p>திருப்பூர், டிச. 9 - மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி. கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 6, 7 ஆகிய நாட்களில் பேச் சுப்போட்டிகள் நடத்தப்படுகின்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட ரங்கில். மகாத்மா காந்தி பிறந்தநாள் பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவர்களுக்கு, தேசத்தந்தை மகாத்மா காந்தி, &nbsp;இந்திய விடுதலைப் &nbsp;போராட்டத்தில் காந்தி, காந்தியச் சிந் தனைகள் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணாக்கர்க ளுக்கு, மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டிக்கு, காந் தியடிகளின் சத்தியாகிரகம் காந்தியடிகளும் வட்டமேசை மாநாடும், காந்தியின் மத நல்லிணக்கம் என்ற தலைப்புகளி லும், &nbsp;ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி பள்ளி &nbsp;மாணவர்களுக்கு, இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங் களிப்பு, நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக &nbsp;அமைதிக்கு &nbsp;நேருவின் தொண்டு என்ற தலைப்புகளிலும் நடைபெறவுள் ளது. தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், அறை &nbsp;எண்.608, மாவட்ட ஆட்சியரகம், திருப்பூர் என்ற முகவரியில் &nbsp;நேரில் / அஞ்சலில் அல்லது ddtamil607@gmail.com என்ற &nbsp;மின்னஞ்சலில் ஜனவரி 5 ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்க &nbsp;வேண்டும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் &nbsp;பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே &nbsp;முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் &nbsp;பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்படும். மேலும், பள்ளி &nbsp;மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் &nbsp;இரண்டு பேரைத் தனியாகத் தெரிவுசெய்து ஒவ்வொருவ ருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000/-வீதம் வழங்கப்ப டும்.</p> <p><strong>மடிக்கணினிகளை திருடிய வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டு சிறை</strong> &nbsp;</p> <p>திருப்பூர், டிச.9- கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்ரகு மான்(30), ஜாபர் அலி(30), பைசல் ரகுமான்(29), &nbsp;அஜ்மல்(28). இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு குன்னத் தூரில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருந்து &nbsp;குடோன் அறையை உடைத்து உள்ளே இருந்த 2 மடிக் கணினிகளை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட னர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஊத்துக்குளி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், 4 பேருக் கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.20 ஆயிரம் அபரா தம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து &nbsp;4 பேரும் திருப்பூர் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடி யினர் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வ ழக்கை செவ்வாயன்று விசாரித்த நீதிபதி சுரேஷ், மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.