தீக்கதிர் சந்தா தொகை ரூ. 3.36 லட்சம் சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு பெ.சண்முகத்திடம் வழங்கியது
5 hours before
<p><strong>தீக்கதிர் சந்தா தொகை ரூ. 3.36 லட்சம் சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு பெ.சண்முகத்திடம் வழங்கியது</strong></p><p>தூத்துக்குடி,ஜூலை 13- சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா தொகை ரூ. 3.36 லட்சம் மாநி லச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவ ட்டக்குழு அலுவலகத்தில் புதன்கிழமையன்று தீக்கதிர் சந்தா தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் தா.ராஜா தலைமை வகித்தார். மாநகர் செயலாளர் எம். எஸ்.முத்து வரவேற்றார். இதில் மாநிலச்செயலாளர் பெ. சண்முகத்திடம் 216 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர், இடைக்கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலாளர் கே. சங்கரன் நன்றி கூறினார்.</p>
