போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்
yesterday
<p><strong>போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்</strong></p><p>ஈரோடு, ஜூன் 21- டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி, இடையன் காட்டு வலசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுக ளாக குரூப் 1, 2, 2ஏ மற்றும் 4 ஆகியவற் றிற்கான டீம் அகாடமி நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி இடையன்காட்டு வலசில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டீம் அகாடமி யின் தலைவர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் அ.ஹாத்திம் தாய் வரவேற்றார். கைத்தறி, துணி நூல் துறை மற்றும் கதர் துறை அமைச்சர் எம். விஜய்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, அக்னி ஸ்டீல்ஸ் இயக்குநர் கே.தங்கவேல், ஈகேஎம் அப்துல்கனி மதரசா இஸ்லாமிய பள்ளி தலைவர் முகமது தாஜ் முகைதீன் மற்றும் முக மது யூனுஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், காசிபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.துரைராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக அகாடமியின் பொறுப்பாளர் எஸ். அய்யாசாமி நன்றி கூறினார்.</p>
