முந்தய பக்கம்

மறுசுழற்சி இயக்கம் மூலம் மக்களுக்கு இலவச புத்தகங்கள்

31 Mar 2026, 4:50 pm
மறுசுழற்சி இயக்கம் மூலம் மக்களுக்கு இலவச புத்தகங்கள்
<p><strong>மறுசுழற்சி இயக்கம் மூலம் மக்களுக்கு இலவச புத்தகங்கள்</strong></p> <p>கோவை, மார்ச் 31- கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் சார்பில் புத்தக மறுசுழற்சி &nbsp;இயக்கம் மூலம் திரட்டப்பட்ட ஆயி ரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் சார்பாக உலக மறுசுழற்சி &nbsp;தினத்தை முன்னிட்டு, படித்ததை பிற ருக்கு படிக்கக் கொடுப்போம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி புத்தக &nbsp;மறுசுழற்சி இயக்கம் தொடங்கப்பட் டது. இந்த இயக்கத்தில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், சட்டத் துறை, மேலாண்மை மற்றும் அறிவி யல், இயற்பியல், உளத்தியல் குடிமைப் &nbsp;பொறியியல், தானி எந்திரப் பொறியி யல், கணிதவியல், ஆங்கிலம், தமிழ் என &nbsp;பல்வேறு தலைப்புகளின் கீழ் 1000க்கும் &nbsp;மேற்பட்ட புத்தகங்கள் 5க்கும் மேற்பட்ட &nbsp;மொழிகளில் பொதுமக்களிடமிருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பி னர்களால் சேகரிக்கப்பட்ட புத்தகங் கள் கொங்குநாடு கலை அறிவியல் கல்லுரியில் காட்சிப்படுத்தப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஐஜி பாரி கலந்து கொண்டு &nbsp;அதிக புத்தகங்களை வழங்கியோ ருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க &nbsp;கோவை மாவட்டத் தலைவர் பேராசிரி யர் இரா. பிரபாகரன், செயலர் மா.மணி &nbsp;மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் &nbsp;கல்லூரியின் செயலர் முனைவர்.சி.ஏ. வாசுகி, பேராசிரியர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram