இலவச கண் பரிசோதனை முகாம்
1 Feb 2026, 3:51 pm
<p><strong>இலவச கண் பரிசோதனை முகாம்</strong></p>
<p>திருப்பூர், பிப்.1- ஊத்துக்குளி அருகே ஞாயிறன்று நடைபெற்ற இல வச கண் பரிசோதனை முகாமில் பலர் கலந்து கொண்டு, பயனடைந்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், எம். தொட்டியபாளையத்தில் அவிநாசி கிளை நல்ல சமாரி யன் சங்கம், திருப்பூர் ஐ பவுண்டேஷன் மற்றும் எம். தொட்டியபாளையம் திருச்சபை சார்பில், இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் ஞாயி றன்று எம்.தொட்டியபாளையத்தில் நடைபெற்றது. எம். தொட்டியபாளையம் பகத்சிங் திடலில் நடைபெற்ற இந்த முகாமை அவிநாசி கிளை நல்ல சமாரியன் சங்க தலை வர் திலகவதி தொடங்கி வைத்தார். முகாமை சங்கத் தின் மண்டல உறுப்பினர்கள் ஒருங்கிணைத்தனர். இம் முகாமில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகாக்குழு உறுப்பி னர் க.பிரகாஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
