முந்தய பக்கம்

பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

2 Feb 2026, 3:32 pm
பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
<p><strong>பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா</strong></p> <p>இராமநாதபுரம், பிப்.2- இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், நரிப்பை யூரில் திங்களன்று கதர் வாரியத் துறையின் மூலம் பனை பொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு &nbsp;விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் &nbsp;மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் &nbsp;துறை செயற்பதிவாளர் வா.சம்பத் ஆகியோர் முன்னிலை &nbsp;வகித்தனர். வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கதர் வாரியத் துறையின் மூலம் ரூ.163 லட்சம் மதிப்பீட்டில் பனை பொருள் வர்த்தக மைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. &nbsp;முன்னதாக வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் &nbsp;ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் காந்தியின் உருவப்படத் திற்கு மரியாதை செலுத்தியதுடன், புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இதில் கதர் துறை துணை இயக்குநர் பாரதி, உதவி &nbsp;இயக்குநர்கள் டீ.எபநேசர், முத்துக்குமார், தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு &nbsp;இணையம் லிட் செயல் ஆட்சியர் க.செந்தில்குமார் மற்றும் &nbsp;அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram