ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டல்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டல்</strong></p>
<p>மயிலாடுதுறை, பிப்.17- மயிலாடுதுறையில் தருமபுரம் ஞானாம்பிகை மகளிர் கலைக்கல்லூரி யில் ரூ.5 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு, தமிழக முதல்வர் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கல்லூரியில் மொத்தம் 1,876 சதுர மீட்டர் அளவில் 15 வகுப்பறைகளு டன் கூடிய கூடுதல் கட்டடம் அமைய உள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள 13 வகுப்பறைகளுடன் கட்டடத்தில் கூடுத லாக 190 சதுர மீட்டர் அளவில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. இன்றைய தினம், கூடுதல் வகுப் பறை கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், தருமபுரம் ஞானாம்பிகை மகளிர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரேவதி, மயிலாடுதுறை நகர் மன்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். </p>
