ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!
9 Apr 2026, 5:30 am
<p><strong>ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!</strong></p><p>சென்னை, ஏப். 8 - தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடை பெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையமானது, அண்மையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மாற்றியது. இதுதொடர்பான விவாதங்கள் அடங்குவதற்கு உள்ளாகவே தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகத்தையும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.</p><p>மேலும், புதிய தலைமைச் செயலாளராக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><strong>லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம்</strong></p><p>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவரது இடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார்.</p><p><strong>சட்டம் - ஒழுங்கு டிஜிபி மாற்றம்</strong></p>
