சிபிஎம் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர் சோலைபழனி காலமானார்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>சிபிஎம் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர் சோலைபழனி காலமானார்</strong></p>
<p>சென்னை, ஜன.7- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் கீழ் புதுப்பாக்கத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில நிர்வாகியுமான சோலைபழனி (75), புதனன்று (ஜன.7) காலமானார். அவருக்கு குப்பம்மாள் (70) என்ற மனைவியும், அருண், அன்பு, பாரதி ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். சோலை பழனி உடலுக்குக் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது உடலுக்குச் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், மற்றும் மாவட்ட, இடைக்கமிட்டி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அவரது பொதுச் சேவை மற்றும் ஆசிரியர் இயக்கப் பணிகளை நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். அவரது இறுதி ஊர்வலம் வியாழனன்று (ஜன.8) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.</p>
