முந்தய பக்கம்

தமிழக - கேரள எல்லையில் இறந்து கிடக்கும் பறவைகள் வனத்துறையினர்

17 Feb 2026, 3:36 pm
தமிழக - கேரள எல்லையில் இறந்து கிடக்கும் பறவைகள் வனத்துறையினர்
<p><strong>தமிழக - கேரள எல்லையில் இறந்து கிடக்கும் பறவைகள் வனத்துறையினர்</strong></p> <p>ஆய்வு தேனி, பிப்.17- தமிழக கேரள எல்லையான கம்பம்மெட்டு அருகே அடுத்தடுத்து பறவைகள் இறந்து வருகின்றன. வனத் துறையினர் இவற்றை கைப்பற்றி பறவை காய்ச்சல் தாக்கமா என்று ஆய்வு செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையாக நெடுங்கண்டம் சாலையில் பாறத்தோடு எனும் இடத்தில் &nbsp;கடந்த சில நாட்களாக காகங்கள் மற்றும் மாடப்புறாக்கள் &nbsp;உள்ளிட்ட பறவைகள் மர்மமான முறையில் இறந்து வரு கின்றன. குறுகிய தூரத்திலேயே பத்துக்கும் மேற்பட்ட பறவை கள் இறந்து கிடப்பது பலருக்கும் கவலையை ஏற்படுத்தி &nbsp;உள்ளது. கேரளாவில் தற்போது பறவைக் காய்ச்சல் அச்சுறுத் &nbsp;தல் இருந்து வரும் நிலையில், பறவைகள் இறந்து கிடந்த தால் இது பறவைக் காய்ச்சல் நோயின் அறிகுறியாக &nbsp;இருக்குமோ என இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பறவை களின் உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத் துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வந்த பிறகே &nbsp;உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram