ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த குரங்கை பிடிக்க வனத்துறை கூண்டு
12 Nov 2025, 3:20 pm
<p><strong>ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த குரங்கை பிடிக்க வனத்துறை கூண்டு</strong></p>
<p>கோவை, நவ.12- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரி யும் குரங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண் காணித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென வந்த குரங்கு ஒன்று கட்டிடங்களின் மீது ஏறி அங்கும் இங்கும் அலைந் தது. தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறு தானிய உணவக வாயில் அருகே நீண்ட நேரம் இருந்த குரங்கு மூதாட்டி ஒருவரிடம் உணவை பறித்துச் சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த வர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் அங்குள்ள சிறுதானிய உணவகத் தின் அருகே குரங்கை பிடிக்க கூண்டு வைத்தனர். மேலும் குரங்கை உள்ளே வரவழைக்க பழங்களை வெட்டி கூண்டுக் குள் போட்டுள்ளனர்.</p>
<p> </p>
