திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான வனமும் வாழ்வும் பயிற்சி நிறைவு
18 Feb 2026, 3:04 pm
<p><strong>திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான வனமும் வாழ்வும் பயிற்சி நிறைவு</strong></p>
<p>திருப்பூர், பிப்.18- வனமும் வாழ்வும் பள்ளி மாணவர்க ளுக்கான பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று நடை பெற்றது. திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளை யம் லிட்டில் பிளவர் கான்வெண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வனத் துறை சார்பில் வனமும் வாழ்வும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்தப் பட்டறையின் மூலம் 25 பள்ளிகளில் தலா 20 மாணவர்கள் என மொத்தம் 500 மாணவர்கள் தேர்வு செய் யப்பட்டு, அவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் பயிற்சி அளிக்கப் பட்டது. இத்திட்டத்தின் நிறைவு நிகழ்வு புதனன்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடைபெற் றது. இதில், மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சிறந்த மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள், பயிற்சியில் பங்குபெற்ற ஆசி ரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான் றிதழ் மற்றும் பயிற்சி நிறைவுச் சான் றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலு வலர் ராஜேஸ், உதவி திட்ட அலுவ லர் (ஒருங்கிணைந்த பள்ளி கல்வி) அண்ணாதுரை, திருப்பூர் வனசரக அலு வலர் நித்யா மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டார்கள்.</p>
