வெளிநாட்டுப் பங்களிப்பு சட்டத் திருத்த மசோதா பிரதமருக்கு
31 Mar 2026, 4:26 pm
<p><strong>வெளிநாட்டுப் பங்களிப்பு சட்டத் திருத்த மசோதா பிரதமருக்கு</strong> </p>
<p>கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரவிருக்கும் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் (FCRA) திருத்த மசோதா தொ டர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யுள்ளார். அக்கடிதத்தில், “வெளிநாட்டுப் பங்களிப்பு சட்டத் திருத்த மசோதா திருத்தங்கள் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் மத நிறுவனங்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மறுபரி சீலனை செய்ய வேண்டும். முன்மொழி யப்பட்ட திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) தங்களது உரிமத்தை இழக்கும் பட்சத்தில், அவற்றின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கென ஒரு புதிய அதிகார அமைப்பை இந்த வெளிநாட்டுப் பங்க ளிப்பு சட்டத் திருத்த மசோதா அறி முகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத் தக்கது.</p>
