பறக்கும் படையினரால் ரூ.8.13 லட்சம் பறிமுதல்
2 Apr 2026, 5:30 am
<p><strong>பறக்கும் படையினரால் ரூ.8.13 லட்சம் பறிமுதல்</strong></p><p>நாகர்கோவில், ஏப்.1- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 மணி நேர சுழற்சி அடிப்படையில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு படைகள் சோதனை நடத்தி வருகின்றன.</p><p>மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தடுக்கவும், தேர்தல் நடத்த விதிமுறைகளில் எச்சரிக்கப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைக்கள் செயல்பட்டு வருகிறது.</p><p>மேற்படி பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படை குழுவினர்களால் மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.8,13,440- ஐ தேர்தல் நடத்தை விதிமுறைகளின் மீறிய வகையில் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>
