பறக்கும்படை சோதனையில் தங்கம், பணம் பறிமுதல்
18 Mar 2026, 3:34 pm
<p><strong>பறக்கும்படை சோதனையில் தங்கம், பணம் பறிமுதல்</strong></p>
<p>உதகை, மார்ச் 18- தமிழ்நாட்டில், ஏப்.23 ஆம் தேதி யன்று சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள தால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனையடுத்து, தங்கம், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திங்களன்று இரவு தொட்டபெட்டா அருகே உள்ள பேரார் பகுதியில் தேர் தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, கோவையிலிருந்து உதகைக்கு வந்த ஒரு லாஜிஸ்டிக் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப் பிலான தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து எந்தவொரு ஆவ ணங்களும் இல்லாததால் தங்க நகை களுடன் வந்த வாகனத்தை, அதிகாரி கள் பறிமுதல் செய்து உதகை கோட் டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்த னர். இதையடுத்து நடைபெற்ற விசா ரணையில், கோவையை சார்ந்த தனி யார் லாஜிஸ்டிக் நிறுவனம் தங்க நகை களை உதகையிலுள்ள பிரபல நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. மேலும், சம்பந்தப்பட்ட தனியார் லாஜிஸ்டிக் நிறு வனத்தினருக்கு தங்க நகைகளுக்கான ஆவணங்களை வருமான வரித்துறை யினரிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, உதகை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையி னர் மேற்கொண்டுள்ள வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலு வலரும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு, காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் ஆய்வு செய்தனர். தருமபுரி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகே னக்கல் ஆலம்பாடி சோதனைச் சாவடி யில் தேர்தல் பறக்கும் படை அலுவ லர் வன அலுவலர் சிவரஞ்சனி தலைமை யிலான குழுவினர் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரி கே.வி ரத்தினம் தெருவை சேர்ந்த குணசேகரன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ 1 லட்சத்து 62ஆயிரத்து 800 பணம் மற்றும் 706 கிராம் வெள்ளி பொருட் கள் வைத்திருந்தது தெரியவந்தது. அதேபோல் நாகதாசம்பட்டி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடு பட்டபோதுகூத்தப் பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப் பட்ட ரூ.68 ஆயித்து350 பணம் பறி முதல் செய்யப்பட்டது. இரு வேறு இடங் களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 31 ஆயித்து 350 பணம் மற்றும் 706 கிராம் வெள்ளி பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் பாபு உதவி தேர்தல் நடத் தும் அலுவலர் ஆறுமுகம் ஆகியோரி டம் ஒப்படைக்கப்பட்டது.</p>
