முந்தய பக்கம்

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

11 Apr 2026, 5:30 am
தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு
<p><strong>தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு</strong></p><p>விருதுநகர், அக்.10- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பணிபுரியும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.சிவஞானம் தலைமை வகித்தார்.</p><p>7 தொகுதிகளின் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலை வகித்தனர். அதில், 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2001 வாக்குச்சாவடிகளில் 128 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் 128 தேர்தல் நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.</p><p>வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்டவை குறித்து தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் எடுத்துரைத்தனர். மேலும் இதில், நேர்முக உதவியாளர் (தேர்தல்) சோமசுந்தர சீனிவாசன், தனி வட்டாட்சியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram