பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம்
11 Apr 2026, 5:30 am
<p><strong>பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம்</strong></p><p>நாமக்கல், ஏப்.10- பரமத்தி வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கும், ஜேடர் பாளையத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்படும் என திமுக வேட்பாளர் கே.எஸ். மூர்த்தி உறுதியளித்தார்.</p><p>நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தி, கபிலர்மலை, பரமத்தி, ஜேடர் பாளையத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். மேலும், இப்பகுதியில் விளையும் விளைபொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என உறுதியளித்தார்.</p>
