பழவேற்காடு படகில் தீவிபத்து
23 Dec 2025, 4:05 pm
<p><strong>பழவேற்காடு படகில் தீவிபத்து</strong></p>
<p>திருவள்ளூர், டிச.23- பழவேற்காடு அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரது படகில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மீனவர் ஜெகன், தனது படகில் மீன்பிடிக்க திருவள்ளூர் மாவட்டம், பழ வேற்காட்டிற்க்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் நடுவில் செவ்வாயன்று (டிச.23), மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் திடீரென தீப்பற்றி படகில் இருந்த என்ஜின் வலை உள்ளிட்ட உபகரணங்கள் கிடுகிடுவென எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்துள்ளனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இவர்களை ராயபுரம் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும், பழவேற்காடு பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும் காப்பாற்றினர். விபத்தில் சிக்கிய மீனவர்களை பழ வேற்காடு மீனவர்கள் மீட்டு உடனடியாக அங்கிருந்து மற்றொரு படகில் ஏற்றிக்கொண்டு பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து பழவேற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
