ஊதியூரில் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து
17 Mar 2026, 3:26 pm
<p><strong>ஊதியூரில் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 17- ஊதியூர் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரியில் மின் கம்பி உரசி தீப்பற்றியதால் வைக்கோல் கட் டுகள் எரிந்து சேதமாகின. திருவாரூரில் இருந்து ஊதியுர் அருகே உள்ள ஒரம்ப புதூர் பகுதிக்கு வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு திங்க ளன்று லாரி சென்று கொண்டிருந்தது. ஒரம்பபுதூர் அருகே சாலையின் குறுக்கே தாழ்வாக இருக்கும் மின் கம்பியில் வைக்கோல் பாரம் உரசியதாகக் கூறப்படுகிறது. இதில் தீப் பொறி ஏற்பட்டு வைக்கோல் கட்டுகளில் பரவியுள்ளது. ஓட்டு நர் சுதாகர் உடனடியாக லாரியை நிறுத்தி அங்கிருந்தவர்கள் உதவியுடன் வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளிவிட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காங்கயம், தாராபுரம் தீய ணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஓட்டுநர் துரித மாக செயல்பட்டதால் சேதமின்றி லாரி தப்பியது. இதுகு றித்து ஊதியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.</p>
