தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசியல் தீர்வு காண்க!

9 Nov 2025, 2:37 pm
                 அரசியல் தீர்வு காண்க!
<p>மணிப்பூரில் குக்கி-ஜோ பழங்குடியினக் குழுக்கள் எழுப்பிய சட்டமன்றத்துடன் கூடிய தனி யூனியன் பிரதேசம் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள் ளது. கடந்த 2 வருடங்களாக மணிப்பூரில் நீடிக்கும் இன மோதல்களின் பின்னணியில், &lsquo;மாநிலத்திற் குள் இணக்கமான சகவாழ்வு சாத்தியமில்லை&rsquo; &nbsp;எனக் கூறி இந்தக் கோரிக்கை முன்வைக்கப் பட்டது. இது, மணிப்பூர் நெருக்கடிக்கு நிரந்தர மான அரசியல் தீர்வு காண்பதில் உள்ள ஆழ மான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டுகிறது.&nbsp;</p> <p>நவம்பர் 6, 7 தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளில், குக்கி தேசிய அமைப்பு (KNO), ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) ஆகிய &nbsp;இரு பெரும் குக்கி அமைப்புகளின் கீழ் இயங்கும் 24 கிளர்ச்சிக் குழுக்கள் பங்கேற்றன. இந்தக் குழுக்கள், அரசுடன் 2008 ஆம் ஆண்டு முதல் கையெழுத்திட்டுள்ள &lsquo;நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தல்&rsquo; (Suspension of Operations - SoO) &nbsp;என்ற ஒப்பந்தத்தின் கீழ் செயல்படு கின்றன. அமைதியை நிலைநாட்ட அரசு மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் மத்தியில் இந்த ஒப்பந்தம் ஒரு பாலமாக உள்ளது.&nbsp;</p> <p>கடந்த 2023 ஆண்டு மே 3-ம் தேதி இன &nbsp;மோதல் வெடிப்பதற்கு முன்னர், குக்கி பழங்குடி யினக் குழுக்கள் மாநிலத்துக்குள் கூடுதல் அதி காரத்துடன் கூடிய தன்னாட்சிப் பிரதேசங் களைக் கோரி வந்தன. வன்முறை வெடித்த பிறகு, &nbsp;இந்தக் கோரிக்கை முற்றிலும் மாறி, தனி யூனியன் பிரதேசம் வேண்டும் என்று உருவெடுத்துள் ளது. இது, மாநிலத்தின் நிர்வாக எந்திரம் தங்கள் உரிமைகளையும் &nbsp;பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறிவிட்டது என்று அவர்கள் கருதுவதன் வெளிப்பாடாகும்.&nbsp;</p> <p>பழங்குடியின நில உரிமைப் பிரச்சினைகள், சட்டரீதியான வாரிசுரிமைச் சிக்கல்கள், இம்பால் பள்ளத்தாக்குக்குச் செல்ல முடியாத பாதுகாப்பு &nbsp;அச்சுறுத்தல் போன்ற அடிப்படைப் பிரச்சினை களுக்கு உறுதியான தீர்வுகளைக் காணாமல், கோரிக்கையை மட்டும் நிராகரிப்பது தீர்வாகாது; அந்தக் கோரிக்கை பொருத்தமல்ல என்ற போதிலும்! மேலும், செப்டம்பர் 4, 2025 அன்று மீண்டும் கையெழுத்திடப்பட்ட SoO உடன்பாட்டில், &lsquo;இந்திய அரசியலமைப்பின் கீழ் &nbsp;பேச்சுவார்த்தை மூலம் தீர்வு&rsquo; என்ற ஒரு புதிய நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. இது, மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கும் விதமாக &nbsp;அமைந்தாலும், அந்த மக்களின் பிரச்சனை களைத் தீர்க்க தடையாக அமையக் கூடாது.</p> <p>சகவாழ்வு சாத்தியமில்லை என்று ஒரு சமூகம் கருதுமளவுக்கு நெருக்கடி முற்றியதற்கு, மணிப்பூரை ஆளும் பாஜக அரசாங்கத்தின் பாரபட்சமான அணுகுமுறையும் நிர்வாக அலட்சியமுமே முக்கியக் காரணங்கள். தனிப் &nbsp;பிரதேசக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலை யில், குக்கி-ஜோ மக்களின் நியாயமான அச்சங் களையும், நீதிக்கான தேடலையும் பூர்த்தி &nbsp;செய்யும் வகையில், ஒன்றிய &nbsp;அரசு &nbsp;உண்மையான அரசியல் தீர்வுக்குரிய கட்டமைப்பை விரைந்து உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.