முந்தய பக்கம்

அரசாங்கத்தின் 5 ஆவது கிளை உரிமை அமைப்புகள்!

11 Apr 2026, 5:30 am
அரசாங்கத்தின் 5 ஆவது கிளை உரிமை அமைப்புகள்!
<p><strong>அரசாங்கத்தின் 5 ஆவது கிளை உரிமை அமைப்புகள்!</strong></p><p>டாக்டர் வி.ராமராஜ் பேச்சு நாமக்கல், ஏப்.10- உரிமை சார்ந்த அமைப்புகளும் மற்றும் வைய நிதி அமைப்புகளும் அரசாங்கத்தின் ஐந்தாவது கிளையாக உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வி.ராமராஜ் தெரிவித்தார்.</p><p>நாமக்கல் அரசு சட்ட கல்லூரியில் ‘உரிமைகள் சார்ந்த சட்டவியலின் பரிமாணம் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றுகையில், ஜனநாயகத்தில் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று கிளைகளுக்கு இணையாக, தேர்தல் நடத்தும் அமைப்புகள் நான்காவது கிளையாக கருதப்படுகிறது.</p><p>ஆனால், அரசியல் அமைப்பு உருவான பிறகு தோன்றிய மனித உரிமை ஆணையங்கள், தகவல் உரிமை ஆணையங்கள், லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளுக்கு அரசியலமைப்பு சட்ட ரீதியான உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram