பெண் யானை சடலமாக மீட்பு
3 Feb 2026, 4:00 pm
<p><strong>பெண் யானை சடலமாக மீட்பு</strong></p>
<p>கோவை, பிப்.3- எட்டிமடை அருகே இறந்த பெண் யானை சடலமாக கண்ட றியப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்கள் குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். கோவை, மதுக்கரை வனச்சரகம் எட்டிமடை பின்புறம் உள்ள வனப்பகுதியில் செவ்வாயன்று வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது திமில்மலை அருகே பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டறி யப்பட்டது. உடனடியாக வன ஊழியர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மதுக் கரை வனச்சரகர் அருண் உள்ளிட்டோர் ஆய்வு செய்தபோது யானையின் உடலில் வெளி காயங்கள் ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. பின்னர் கால்நடை மருத்துவக் குழுவினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள் முன் இறந்த யானைக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது யானை யின் உடல் உறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை ஆய்வுக் காக அனுப்பி வைக்கப்பட்டது.</p>
