பிப்.6 - கன்னிமரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
31 Jan 2026, 3:56 pm
<p><strong>பிப்.6 - கன்னிமரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு</strong></p>
<p>சென்னை, ஜன. 31- மாமேதை காரல் மார்க் சின் முழு உருவச்சிலை, சென்னையில் பிப்ரவரி 6 அன்று திறக்கப்பட உள்ள தாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில், காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோரின் சிலை மற்றும் மணிமண்டபத்தைத் திறந்து வைத்து, முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமையன்று உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் என் னிடத்தில் சில மாதங்க ளுக்கு முன்பு, மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், கார்ல் மார்க்ஸ் அவர்க ளுக்குச் சிலை வைக்க வேண்டும், தமிழ்நாட்டில்... குறிப்பாகச் சென்னை மாந கரத்தில் வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். கார்ல் மார்க்ஸ் அவர்கள் நூலகத்தை அதிக அளவு பயன்படுத்தியிருக்கிறார். நூலகத்தில் தான் அவரு டைய வாழ்வே அமைந்தி ருந்தது. அதனால் சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருக்கக்கூடிய மியூசி யத்தில் அவருக்கு ஒரு சிலை அரசின் சார்பில் அமைக்கப் பட்டு, வருகிற ஆறாம் தேதி திறந்து வைக்கப்பட இருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் வர வேண்டும் என்று, முக்கியமாக இங்கு இருக்கக்கூடிய தலை வர்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று அரசின் சார்பில் உங் கள் அத்தனை பேருக்கும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.</p>
