முந்தய பக்கம்

மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

3 Apr 2026, 5:30 am
மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!
<p><strong>மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!</strong></p><p>கொச்சி, ஏப். 2 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) திருத்தமானது, மதச் சிறுபான்மையினரை மட்டுமல்லாது, சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளையும் குறிவைப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறியுள்ளார்.</p><p>எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் வியாழனன்று நடைபெற்ற &#39;தலைவருடன் சந்திப்பு&#39; நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்களை ஒடுக்குவதற்கே எப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்தின் நோக்கம்.</p><p>முதியோர் இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்தி வரும் தன்னார்வ அமைப்புகளின் ஒட்டுமொத்தச் சொத்துகளையும் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை இச்சட்டம் ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>கேரளத்தில் காங்கிரஸும் யுடிஎப்-ம் தான் மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகளுடன் பகிரங்கமாகத் தேர்தல் கூட்டணி வைத்துள்ளன. தற்போது வரவிருக்கும் தேர்தலுக்காக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளிப்பதில் காங்கிரஸும் பாஜகவும் போட்டி போட்டு வருகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram