முந்தய பக்கம்

மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

3 Apr 2026, 5:30 am
மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!
<p><strong>மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!</strong></p><p>கொச்சி, ஏப். 2 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) திருத்தமானது, மதச் சிறுபான்மையினரை மட்டுமல்லாது, சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளையும் குறிவைப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறியுள்ளார்.</p><p>எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்களை ஒடுக்குவதே எப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்தின் நோக்கம். தன்னார்வ அமைப்புகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது.</p><p>ஆனால், நாட்டில் வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டிவிடும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத எதிர்ப்பே இடதுசாரிகளின் நிலைப்பாடு. கேரளத்தில் காங்கிரசும் யுடிஎப்-பும் தான் மதவாத சக்திகளுடன் கூட்டணி வைத்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram