முந்தய பக்கம்

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

17 Feb 2026, 3:36 pm
தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை
<p><strong>தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை</strong></p> <p>தருமபுரி, பிப்.17- பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து, &nbsp;விலை கடுமையாக சரிந்துள்ளதாக விவசாயிகள் கவ லையடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி, பெல்ரம்பட்டி, &nbsp;சோமனஹள்ளி, பேகாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த &nbsp;சில நாட்களாக பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து &nbsp;அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கடுமை யாக சரிந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு &nbsp;கிலோ தக்காளி ரூ.8 வீதமும், 15 கிலோ எடை கொண்ட &nbsp;கூடை ரூ.120 வரைக்கும் விற்பனையானது. தொடர்ந்து, &nbsp;திங்களன்று மேலும் குறைந்து கிலோ ரூ.6 வீதமும், கூடை &nbsp;ரூ.90க்கும் விற்பனையானது. தக்காளி விலை கடும் &nbsp;சரிவை சந்தித்துள்ளதால், தக்காளி பயிரிட்ட விவசாயிக ளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram