பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>விருதுநகர், ஜன.8- தமிழக அரசால் கடந்த 3 ஆண்டு களாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததை கண்டித்து, விருதுநகரில் பால் உற்பத்தியா ளர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பருத்திக்கொட்டை, புண் ணாக்கு, தவுடு, கலப்பு தீவனம் உள்ளிட்ட கால்நடை தீவனங்க ளின் விலை பல மடங்கு உயர்ந் துள்ள நிலையில், பால் கொள் முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.45 மற் றும் எருமைப் பாலுக்கு ரூ.60 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். கடந்த 3 மாதங்களாக வழங் கப்படாத ஊக்கத்தொகையை உட னடியாக வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள் ராஜ் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் ஆர்ப்பாட்டத் தைத் துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.முருகன் கண்டன உரை நிகழ்த்தினார். குழந்தைகள் சத்துணவு திட்டத் தில் பால் வழங்க வேண்டும், தொடக்க சங்க ஊழியர்களின் சம்ப ளத்தை உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தேனி தேனி மாவட்டம் போடி அருகே தர்மத்துப்பட்டியில் கூட்டு றவு உற்பத்தியாளர்கள் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.செல்வ ராஜ் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் எச்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். விவசாயி கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன், மாவட்ட நிர்வாகி எஸ்.சுருளி வேல், எஸ்.செல்வம், மொக்கச் சாமி, காமராஜ், ராமகிருஷ்ணன், முருகேசன் உள்ளிட்டோர் முழக்க மிட்டனர்.</p>
