மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விவசாயிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
19 Nov 2025, 7:23 am
<p>இன்று கோவை வரும் நரேந்திர மோடிக்கு எதிராக விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.<br />
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வருகிறார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது.<br />
போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, பிரதமர் மோடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.<br />
<strong>போராட்டத்தில் பேசிய விவசாயிகள் கூறியதாவது:</strong></p>
<ul>
<li>“மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்க ரூ.500 கோடி ஒதுக்கி இருக்கும் பிரதமர் மோடிக்கு, இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தார்மீக உரிமை இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி வழங்க கூடாது.</li>
<li>நதி நீர் இணைப்பில் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தென்னக நதிகளை இணைக்க எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.</li>
<li>விவசாயப் பொருட்களுக்கு 2 மடங்கு விலை வழங்குவோம் என கூறிய பிரதமர், நெல் டன் ஒன்றுக்கு ரூ.7000 உயர்த்த வேண்டிய இடத்தில் வெறும் ரூ.3 மட்டுமே உயர்த்தியுள்ளார். எனக் கூறி கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</li>
</ul>
<p>போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.</p>
