நிலப்பட்டா கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
20 Dec 2025, 3:38 pm
<p>கடலூர் வட்டம் மலையடிக்குப்பம் கிராமத்தில், 5 தலைமுறைகளாகச் சாகுபடி செய்து வரும் நிலங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் போராட்டத்தைத் துவக்கி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜெ.ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். பயிர்களை அழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். </p>
