கடைமடை பாசன பகுதியில் கருகும் பயிர்கள் முறை வைக்காமல் தண்ணீர் விட விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>கடைமடை பாசன பகுதியில் கருகும் பயிர்கள் முறை வைக்காமல் தண்ணீர் விட விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்</strong></p>
<p>அறந்தாங்கி, நவ.16- புதுக்கோட்டை மாவட்டம் கல்லணை கால்வாய் கடைமடை பாசனப்பகுதியில் அனவயல் வாய்க்கால், அம்மணிசத்திரம் வாய்க்கால், திருவாப்பாடி வாய்க்கால். கலக்கமங்கலம் வாய்க்கால், நிலையூர் வாய்க்கால் ஆகிய நேரடி பாசன பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. இந்நிலையில், முறை வைத்து காவிரி தண்ணீர் வழங்குவதை கண்டிப்பதுடன், நாகுடி உதவி பொறியாளர், தெற்கு வெள்ளாறு பகுதிக்கு தண்ணீர் விற்பனை செய்வதாக விவசாயிகளிடமிருந்து தகவல் வருகிறது. ஆகவே, தமிழக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நாகுடி உதவி பொறியாளரை உடனடியாக இடம் மாற்றம் செய்யவும், முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதி விவசாயத்திற்கு, காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை செயல்படுத்தி தண்ணீர் திறந்து விட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
